இந்திய வரலாற்றில் திருப்புமனை நிகழ்வுகளை நிகழ்த்திய, வந்தவாசி கோட்டையைச் சுற்றிப் பார்த்த செய்யாறு துணை ஆட்சியர் அம்பிகா ஜெயின், அந்த அனுபங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் நீண்ட பதிவாக எழுதியுள்ளார். நெகிழ்ச்சியான அவரின் அனுபவ எழுத்துகள் தமிழில் உங்களுக்காக...
(முக்கியமான) வரலாறு பலமுறை நம் கண் முன்னே மறைந்து கிடக்கிறது
சில நேரங்களில் அது ஒரு சிறிய பயணத் தூரத்திலேயே இருக்கிறது.
இந்த இடம் இந்தியாவின் மிகத் தீர்மானமான போர்களில் ஒன்றின்
சாட்சியாக இருந்தது
அதுவும் உலக வரலாற்றின் பாதையையே மாற்றிய ஒரு போர்
என்று சொன்னால்
உங்கள் எதிர்வினை என்னவாக இருக்கும்?
1760 ஆம் ஆண்டு,
என்னுடைய தற்போதைய நிர்வாக எல்லைக்குள் வரும்
சாதாரணமான ஊராகத் தோன்றும் வந்தவாசி,
பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் இடையேயான
உலகளாவிய அதிகாரப் போராட்டத்தின் களமாக மாறியது.
இது ஒரு உள்ளூர் மோதல் மட்டுமல்ல
இந்தியாவின் காலனித்துவ வெற்றிப் பயணத்தின்
முக்கிய திருப்புமுனையாக இருந்தது.
வண்டிவாஷ்.
நினைவிருக்கிறதா?
1760 ஜனவரி 22 அன்று,
சர் ஐயர் கூட் தலைமையில் பிரிட்டிஷ் படையும்
கவுண்ட் டி லாலி தலைமையிலான பிரெஞ்சு படையும்
இந்தக் கோட்டைக்கு அருகில் நேரடியாக மோதின.
முடிவு என்ன?
பிரிட்டனின் தீர்மானமான வெற்றி
இந்தியாவில் பிரான்சின் ஆசைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
வந்தவாசி (வண்டிவாஷ்) தோல்விக்குப் பிறகு,
பிரெஞ்சின் ஆதிக்கம் வேகமாக சுருங்கியது
அவர்கள் ஆற்காடு, பாண்டிச்சேரி ஆகியவற்றையும்
தென்னிந்தியாவின் அரசியல் செல்வாக்கையும் இழந்தனர்.
இந்தப் போர்தான்
இந்த துணைக் கண்டத்தில் பிரிட்டிஷ் மேலாதிக்கத்தின்
ஆரம்பமாக அமைந்தது.
கருங்கல், சுண்ணாம்பினால் கட்டப்பட்ட இந்தக் கோட்டை,
இன்றும் உறுதியாக நின்று,
மாறும் பேரரசுகளுக்கும் காலத்தின் நிலைத்தன்மைக்கும்
மௌனச் சின்னமாக விளங்குகிறது.
அதன் வழித்தடங்களில் நடப்பது
மறக்கப்பட்ட மகத்தான வரலாற்றின்
அத்தியாயங்களில் நடப்பது போலவே உணர்த்தியது.
தமிழ்நாடு தொல்லியல் துறையின் தகவலின்படி,
ஒருகாலத்தில் இக்கோட்டையில் அற்புதமான இராணுவத் துல்லியத்துடன் வடிவமைக்கப்பட்ட பெரிய நுழைவாயில்கள், அரண்கள், காவல் கோபுரங்கள் இருந்தன.
செஞ்சிக்கு செல்லும் ரகசிய சுரங்கப் பாதை ஒன்று இருந்ததாக
ஊர்க் கதைகளும் கூறுகின்றன!
இங்குள்ள ஒவ்வொரு சுவரும்
திட்டமிடுதல், துணிச்சல் மற்றும் பேராசைகளை
மௌனமாக ஒலிக்கச் செய்கிறது.
வண்டிவாஷ் போர் என்பது
வெறும் படைகளுக்கிடையேயான மோதல் அல்ல
அது இறுதிமுடிவு பற்றியதாகும்.
இந்திய மண்ணில் தொடங்கிய ஐரோப்பிய நாடுகளின் போட்டி
உலக காலனித்துவ வரலாற்றின்
ஒரு தீர்மானிக்கும் தருணமாக மாறியது.
இன்று அமைதியான ஊராகத் தோன்றும் வந்தவாசி,
ஒரு காலத்தில்
18 ஆம் நூற்றாண்டின் புவியியல் அரசியலின்
மையமாக இருந்தது என்பதை பலர் அறியவில்லை.
இந்த இடத்தில்தான்
இந்தியாவின் வரைபடம்
மாறத் தொடங்கியது.
வந்தவாசி கோட்டையின் உச்சியில் நின்றால்,
இன்றும் போர் முழக்கங்கள், புகை மேகங்கள்,
ஆசைகள் மற்றும் தைரியம்
நூற்றாண்டுகளை வடிவமைத்த ஒலிகள்
மனக்கண் முன் தோன்றும்.
இது ஒரு நினைவுச் சின்னம் மட்டும் அல்ல
இந்தியாவின் அசாதாரணமான கடந்தகாலத்தின்
உயிர்ப்பான பாடம்.
இந்தியா அதிசயங்களால் நிரம்பியுள்ளது
சில புகழ்பெற்றவை,
பல இன்னும் அறியப்படாதவை.
வந்தவாசி கோட்டை
அத்தகைய வரலாற்றின்
மௌன காவலன்களில் ஒன்றாக நிற்கிறது.
வாருங்கள் —
அறியப்படாத இந்தியாவை மீண்டும் கண்டுபிடித்து, பாதுகாத்து,
நம்மைச் சுற்றியுள்ள மறைந்த மாவீர வரலாற்றில்
பெருமை கொள்வோம்.
(Momentous) History often hides in plain sight,
— Ambica Jain (@ambica_jain12) November 9, 2025
and sometimes, just a drive away.
What would be your reaction
if I told you that
this 👇🏾place
was
the witness to
one of India’s most decisive battles that
changed the course of world history?#TamilNadu #History @DalrympleWill pic.twitter.com/q02PSbwkor


