வந்தவாசி வெண்குன்றம் தவளகிரி கிரிவலம் தை மாத பௌர்ணமி (முழு நிலவு) முன்னிட்டு 1.2.2025 ஞாயிறு, மதியம் 2.00 மணி அளவில் தவளகிரி கிரிவலம் தொடங்கப்பட உள்ளது. பஜனையுடன் நாம சங்கீர்த்தனம் செய்த படி சுவாமி வரும் வழியில் அனைத்து மண்டகப்படியில் கூட்டு பிராத்தனை செய்யப்பட்டு, வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று கிரிவலம் செய்து இறைவன் அருள் பெற வேண்டும் என கிரிவலக் குழு கேட்டுக்கொண்டுள்ளது.

