திருவண்ணாமலை மாவட்டத்தில், வந்தவாசி வடக்கு உட்பட பல்வேறு காவல் நிலையங்கள் தரம் உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் சப்-இன்ஸ்பெக்டர் பதவியில் செயல்படும் சட்டம்-ஒழுங்கு காவல் நிலையங்கள், இன்ஸ்பெக்டர் பதவியிலான காவல் நிலையமாக தரம் உயர்த்தப்படும் என்று கடந்த ஏப்ரல் மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அதன்தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் 280 சப்-இன்ஸ்பெக்டர் பதவியிலான காவல் நிலையங்கள் தரம் உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. அதன்படி, வேலூர் காவல் சரகத்தில் திருவண்ணாமலை மாவட்டத்திலும் காவல் நிலையங்கள் தரம் உயர்த்தப்படுகின்றன.
திருவண்ணாமலை மாவட்டத்தில் வந்தவாசி வடக்கு, மங்கலம், வேட்டவலம், தச்சம்பட்டு, ஜமுனாமரத்தூர், களம்பூர், சந்தவாசல், புதுப்பாளையம், பாச்சல், மோரணம், அனக்காவூர் ஆகிய காவல் நிலையங்கள் தரம் உயர்கின்றன.