அனைத்து அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகள், முன்னாள் ராணுவ வீரர்களுக்கான அங்காடி, அரசு மற்றும் தனியார் மதுபான கூடங்கள் ஆகியவற்றை நாளை (ஞாயிற்றுக்கிழமை) வடலூர் வள்ளலார் நினைவு நாளன்று மூட வேண்டும் என்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.
அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள், முன்னாள் ராணுவ வீரர்களுகான அங்காடி, அரசு மற்றும் தனியார் மதுபானக் கூடங்கள் அனைத்தும் விடுமுறை அளிக்கப்பட்டு நாளை விற்பனை இன்றி மூடி வைக்கப்படும்.
இந்த தகவலை கலெக்டர் தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார்.
