வந்தவாசி அருகே தென்னாங்கூரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது...
2025-26-ம் கல்வியாண்டின் இளநிலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு 3-ம் கட்ட பொதுக் கலந்தாய்வு நாளை (18-06-2025 புதன்கிழமை) நடக்கிறது.
இதில், பி.காம்., பி.ஏ., தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய கலை பாடப்பிரிவுகளுக்கும், பி.எஸ்சி., இயற்பியல், உயிர் வேதியியல், கணினி அறிவியல், கணிதம், விலங்கியல் ஆகிய அறிவியல் பாடப்பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடக்கிறது.
ஏற்கனவே நடைபெற்ற முதல் மற்றும் 2-ம் கட்ட கலந்தாய்வில் விடுபட்ட மாணவர்கள், கடந்த மாதம் 29-ந் தேதிக்கு பிறகு விண்ணப்பித்தோர் இந்த கலந்தாய்வில் பங்கேற்கலாம்.
கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்கள் உரிய சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல்கள், சேர்க்கை கட்டணம், பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் ஆகியவற்றுடன் காலை 9 மணிக்குள் கல்லூரிக்கு வர வேண்டும்.