செய்யாறு சிப்காட் - துறைமுகம் தொழிற்தட சாலை, திருவண்ணாமலை வரை நீட்டிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
தமிழக சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது துணை சபாநாயகர் பிச்சாண்டி, “செய்யாறு சிப்காட் - எண்ணூர் துறைமுகத்திற்கு செல்லும் தொழிற்தட சாலை திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்படுமா? என்று கேள்வி எழுப்பினார். அவருக்கு பதில் அளித்து பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசியபோது, செய்யாறு சிப்காட்-எண்ணூர் தொழிற்தட சாலை, திருவண்ணாமலை வரை நீட்டிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும், இந்த சாலை திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்படும் பட்சத்தில், சிப்காட்டில் உற்பத்தி செய்யும் பொருட்கள் எளிதாக துறைமுகம் கொண்டு செல்லப்படும் என்றும் திருவண்ணாமலை கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கும் அது உதவியாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.