திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த செம்பூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சக்திவிநாயகர் மற்றும் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் கோவில் மகா கும்பாபிஷேகம் விழா வெகு விமர்சியாக நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து சிவாச்சாரியார்கள் கோவில் வளாகத்தில் யாகசாலை அமைத்து கணபதி ஹோமம் நவகிரக ஹோமம் மகாலட்சுமி ஹோமங்கள் உள்ளிட்ட பல்வேறு ஹோமங்கள் நடத்தினர். பின்னர் கலசங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மகா பூர்ணாஹூதி நடைபெற்றது. பின்னர் சிவாச்சாரியார்கள் கலசங்களை தலையில் சுமந்தவாறு கோயில் சுற்றி வலம் வந்து கோபுரத்தில் உள்ள கலசத்திற்கு புனித நீரை ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் அந்த புனித நீரை பக்தர்களுக்கு தெளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஸ்ரீ சக்தி விநாயகர் மற்றும் ஸ்ரீ பாலசுப்பிரமணியருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது . பின்னர் மங்கள மேள வாத்தியங்கள் முழங்க மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இந்த மகா கும்பாபிஷேகத்தில் சுற்று வட்டார கிராமப்புற பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்தனர்.