தமிழ்நாட்டில் விவசாய கடன்களை அனைவருக்கும் எளிதாக்குக! ஆரணி திமுக எம்.பி. தரணிவேந்தன்

2014 ஆம் ஆண்டிலிருந்து தமிழ்நாட்டிற்க்கு வழங்கப்பட்ட மொத்த கிசான் கடன் அட்டைகளின் (KCCs) எண்ணிக்கை குறித்து திமுக ஆரணி மக்களவை உறுப்பினர் தரணிவேந்தன் கேள்வி எழுப்பியுள்ளார். 



சிறு மற்றும் குறு விவசாயிகள், குத்தகை விவசாயிகள் மற்றும் பெண் விவசாயிகள் ஆகியோர் கிசான் கடன் அட்டைகளை எளிதாகப் பெறுவதை உறுதிசெய்ய அரசாங்கம் ஏதேனும் நடவடிக்கைகளை எடுத்துள்ளதா?  கிசான் கடன் அட்டைகளுக்காகப் பெறப்பட்ட விண்ணப்பங்களில் நிராகரிக்கப்பட்டவை அல்லது நிலுவையில் உள்ளவற்றின் எண்ணிக்கை என்ன? மற்றும் அதற்கான காரணங்கள் என்ன? கிசான் கடன் அட்டைகளின் வரம்பை விரிவுபடுத்தி, மீன்வளம், கால்நடை வளர்ப்பு மற்றும் பட்டுப்புழு வளர்ப்பு போன்ற தொடர்புடைய துறைகளையும் அதில் இணைப்பதற்கான திட்டங்கள் என்ன? கிசான் கடன் அட்டைத் திட்டத்தின் கீழ், கடன் வழங்குவதில் ஏற்படும் தாமதங்களைக் குறைக்கவும், நியாயமான வட்டி விகிதங்களை உறுதி செய்யவும், சிறு விவசாயிகள் மீது ஏற்படும் கடன் சுமையைத் தடுக்கவும் அரசாங்கம் எடுத்துவரும் நடவடிக்கைகள் என்னென்ன? எனும் பல்வேறு கேள்விகளை அவர் எழுப்பியுள்ளார்.


புதியது பழையவை

About Me

WhatsApp Button